விலகிய கான்வே - CSK'யில் மிரட்ட போகும் 2 ஆல் ரவுண்டர்கள் - தோனியின் பிளான்..!

MS Dhoni Chennai Super Kings Cricket IPL 2024
By Karthick Mar 04, 2024 06:10 AM GMT
Report

காயம் காரணமாக சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

சென்னை அணி

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் defending champions சென்னை அணியின் மீது பல எதிர்பார்ப்புகள் உள்ளது. சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி தொடராக இது தான் அமையும் என மீண்டும் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், மீண்டும் சென்னை சாம்பியன் ஆகுமா..? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

champions CSK 2023

வரும் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கு இப்போதே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பும் உண்டாகிவிட்டது.

CSk captain Dhoni

குதூகலத்துடன் தொடரை வரவேற்க காத்திருந்த சென்னை அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

devon conway
சென்னை அணிக்கு இது பின்னடைவு தான் என கருத்தினாலும், அணி நிர்வாகமும் - தல தோனியும் வேறு திட்டங்களை வைத்திருப்பார்கள் என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பேச துவங்கிவிட்டனர். அப்படி தான் தற்போது இரண்டு ஆல் ரவுண்டர்கள் சென்னை அணிக்கு புதிதாக தயாராகி வருகின்றார்கள்.   

Tushar deshpande

நடைபெற்று வரும் ரஞ்சித் தொடரில் பந்துவீச்சாளரான துஷர் தேஷ்பண்டே காலிறுதி போட்டியில் பரோடா அணிக்கு எதிராக 11ஆவது வீரராக களமிறங்கி, 129 பந்துகளில் 10 பவுண்டரி, 8 சிக்ஸர்களை விளாசி 123 ரன்களை குவித்து மிரட்டினார்.

shardul thakur

அதே போல, இதே ரஞ்சித்தோடரில் அரையிறுதி போட்டியில், சென்னை அணியின் மற்றொருமொரு பந்துவீச்சாளரான ஷர்தூல் தாகூர், தமிழ்நாடு அணிக்கு எதிராக 9ஆவது வீரராக களமிறங்கி 104 பந்துகளில் 13 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 109 ரன்களை குவித்துள்ளார்.

இனி IPL விளையாட வாய்ப்பே இல்லையா..? CSK வீரருக்கு வந்த சோதனை..?

இனி IPL விளையாட வாய்ப்பே இல்லையா..? CSK வீரருக்கு வந்த சோதனை..?

இவர்கள் பந்துவீச்சாளர்கள் என்ற போதிலும், பேட்டிங்கில் சென்னையின் அணிக்கு கடைசி வரை நம்பிக்கை கொடுக்கும் வகையில் இவர்கள் தற்போது ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.