மது குடிக்க பணம் இல்லை - 4 மாத பெண் குழந்தையை ரூ.100-க்கு விற்ற கொடூர தாய்!

Karnataka Crime
By Sumathi May 06, 2024 07:31 AM GMT
Report

தாய் ஒருவர் தனது குழந்தையை ரூ.100-க்கு விற்றுள்ளார்.

மது பழக்கம்

கர்நாடகா, உலிகி கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார். சாலையோரங்களிலும், மண்டபங்களிலும் தங்கி வந்துள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

மது குடிக்க பணம் இல்லை - 4 மாத பெண் குழந்தையை ரூ.100-க்கு விற்ற கொடூர தாய்! | Mother Sold 4 Month Baby Rs100 For Drinks

இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், இவரின் ஒரு குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த அங்கன்வாடி ஊழியர்கள் அந்தப் பெண்ணை சந்தித்து பேசியுள்ளனர்.

500 ரூபாய்க்கு குழந்தைகளை வாடகைக்கு எடுத்த பெண்கள் - பிச்சை எடுத்த பயங்கரம்!

500 ரூபாய்க்கு குழந்தைகளை வாடகைக்கு எடுத்த பெண்கள் - பிச்சை எடுத்த பயங்கரம்!

குழந்தை விற்பனை

அதன்பின், குழந்தையை மீட்டு கொப்பல் மாவட்ட குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணிடம் இதுகுறித்து விசாரிக்கையில், அந்த பெண்ணுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

மது குடிக்க பணம் இல்லை - 4 மாத பெண் குழந்தையை ரூ.100-க்கு விற்ற கொடூர தாய்! | Mother Sold 4 Month Baby Rs100 For Drinks

மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் 4 மாத பெண் குழந்தையை அந்த பெண், அதேப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ.100-க்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

மேலும், இதேபோல் மற்றொரு குழந்தையையும் விற்று இருக்கலாம் என கூறப்படுகிறது.