13 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் - நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!

Crime Odisha Murder
By Vidhya Senthil Oct 20, 2024 06:53 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 13 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  13 வயது சிறுவன்

ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள ஜல்பான்கேல் கிராமத்தைச் சேர்ந்த தாபான் பிவார். இவருடைய மகன் சோம்நாத் பிவார் (வயது 13).இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை திடீரென்று காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் பெற்றோர் தேடிப்பார்த்துள்ளனர்.

black magic

ஆனால் எங்குத் தேடியும் கிடைக்காததால் மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு காவல்துறையிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் ஊர் முழுவதும் சிறுவனைத் தேடினர்.அப்போது காணாமல் போன சிறுவனின் உடல் ஜாலியாலிட்டி கிராமத்துக்கு உட்பட்ட வனப்பகுதியிலிருந்து கண்டுபிடித்தனர்.

மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை..9 வயது சிறுமியை சாலையில் வீசி சென்ற கொடூரம்!

மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை..9 வயது சிறுமியை சாலையில் வீசி சென்ற கொடூரம்!

இதையடுத்து காவல்துறை, தடயவியல் நிபுணர்கள் சிறுவன் உடல் கிடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவனின் உடலைப் பார்த்துக் கதறி அழுத பெற்றோர்,’’எனது மகன் நரபலி கொடுப்பதற்காகக் கொல்லப்பட்டுள்ளார் .

 நரபலி

பவுர்ணமி என்பதால் என் மகனைப் பலி கொடுக்க யாரோ முயற்சி செய்திருக்கின்றனர். என் மகனை உயிரோடு புதைக்க முயன்றிருக்கின்றனர். ஆனால், புதைக்காமல் விட்டு விட்டனர்," என்று கூறி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

death

இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டாரா? அல்லது பழிக்குப் பழி நடத்தப்பட்ட கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.