கை கால்களை கட்டிபோட்டு..மோசமாக சாலையில் கிடந்த சிறுமி - வெளியான திடுக்கிடும் தகவல்!

Sexual harassment Uttar Pradesh India
By Swetha Oct 15, 2024 03:27 PM GMT
Report

சிறுமி ஒருவர் சாலையில் கட்டப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி 

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ பகுதியின் லாலுளாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அதிகாலையில் சில தனிபபட்ட காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

கை கால்களை கட்டிபோட்டு..மோசமாக சாலையில் கிடந்த சிறுமி - வெளியான திடுக்கிடும் தகவல்! | Girl Got Gang Raped Found On Road Shock Incident

வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் அவரை தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், சின்ஹாட் சாலையில், கை கால்கள் கயிற்றால் கட்டுப்பட்டு மிக மோசமான நிலையில் சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.

உடனே சிறுமியை அவரது பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமையை செய்திருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை -விடிய விடிய.. கள்ளக்காதலின் வெறிச்செயல்!

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை -விடிய விடிய.. கள்ளக்காதலின் வெறிச்செயல்!

தகவல்

அதில், அதிகாலை நேரத்தில் தனியாக வீட்டை விட்டு வெளியே வந்த சிறுமியை கண்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் சிறுமி மயக்கமடைந்துள்ளார்.

கை கால்களை கட்டிபோட்டு..மோசமாக சாலையில் கிடந்த சிறுமி - வெளியான திடுக்கிடும் தகவல்! | Girl Got Gang Raped Found On Road Shock Incident

சிறுமி இறந்துவிட்டதாக எண்ணிய அந்த இளைஞர்கள், சிறுமியின் கை கால்களை கயிற்றால் கட்டி சாலையில் வீசிச் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.