இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை -விடிய விடிய.. கள்ளக்காதலின் வெறிச்செயல்!

Sexual harassment Crime Sivagangai
By Vidhya Senthil Sep 18, 2024 10:58 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 இளம்பெண்ணை ஏமாற்றிக் கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 திருவாடானை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு, கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சேர்ந்த திருமணமாகாத வாலிபரும் செல்போன் மூலம் அறிமுகமாகி நட்பாகப் பழகி வந்துள்ளனர்.

sexual harassment

இந்த நட்பு ஒருகட்டத்தில் கள்ளக்காதலாக மாறியதால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இளம் பெண்ணை அழைத்துக் கொண்டு சிவகங்கை சென்றுள்ளார். அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் தங்கினர்.

மயக்க மருந்து; இளம்பெண் பாலியல் வன்கொடுமை - சினிமா தயாரிப்பாளரின் வெறிச்செயல்!

மயக்க மருந்து; இளம்பெண் பாலியல் வன்கொடுமை - சினிமா தயாரிப்பாளரின் வெறிச்செயல்!

அப்போது இளம்பெண்ணைப் பலமுறை வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அந்த வாலிபர் மற்றும் அவரது சக நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவும் எடுத்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

அதன் பிறகு அந்த பெண்ணிடம் வீடியோவை காண்பித்து சுமார் 5 பவுன் நகை மற்றும் பணத்தைப் பறித்ததோடு, அந்த இளம்பெண்ணை 5 வாலிபர்களும் சேர்ந்து மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

arrest

இளம்பெண்ணின் கணவர், தனது மனைவியைக் காணவில்லை என திருவாடானை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணின் புகைப்படத்தைக் காண்பித்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலரிடம் விசாரித்துள்ளார்.

அப்போது அவரது மனைவியை அப்பகுதி வாலிபர்கள் சிலர், வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் இளம் பெண்ணை மீட்டனர்.மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.