மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை..9 வயது சிறுமியை சாலையில் வீசி சென்ற கொடூரம்!

Maharashtra Crime Murder
By Vidhya Senthil Oct 15, 2024 06:55 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் வீசி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்ட்டிரா

சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அவர்களை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

rape

அதுமட்டுமில்லாமல் 5 வயது முதல் 80 வரை உள்ள பெண்களுக்களை போகப் பொருளாகவே பார்க்கிறது .இதனால் தொடர் குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் 9 வயது சிறுமிக்குக் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடத்தி கொல்லப்பட்ட 10 வயது சிறுமி - நீதிபதி முன்னிலையில் உடல் கூறாய்வு? வெளியான அதிர்ச்சி தகவல்!

கடத்தி கொல்லப்பட்ட 10 வயது சிறுமி - நீதிபதி முன்னிலையில் உடல் கூறாய்வு? வெளியான அதிர்ச்சி தகவல்!

மகாராஷ்ட்டிரா மாநிலம் ஜல்னா நகரத்தில் உள்ள சாந்தாஞ்ஹிரா சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

9 வயது சிறுமி 

இது குறித்துக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர் .உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

ஆனால் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

arrest

 முதற்கட்ட விசாரணையில் சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அந்த நபர் மயக்க மருந்து கொடுத்து சிறுமியைத் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துவிட்டு சாலையில் வீசிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

பின்னர் குற்றவாளி மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வரையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது.