முதல்வர் ஒவ்வொரு பணியையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார் - உதயநிதி பெருமிதம்!

Udhayanidhi Stalin Tamil nadu DMK Viluppuram
By Jiyath Jul 07, 2024 03:53 PM GMT
Report

விக்கிரவாண்டியில் ரூ.75 லட்சத்தில் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் 

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு வரும் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல்வர் ஒவ்வொரு பணியையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார் - உதயநிதி பெருமிதம்! | Minister Udayanidhi Stalin Speech In Vikravandi

இந்நிலையில் திமுக சார்பில் அந்த தொகுதியில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை ஆதரித்து திருவாமாத்தூர் கிராமத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர் "ஒவ்வொரு பணியையும் பார்த்துப் பார்த்து முதல்வர் செய்து வருகிறார்.

பெண்களுக்கான விடியல் பயணத் திட்டத்தில் 500 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டத்தால் பலரும் பயனடைந்து வருகின்றனர்.

31 நாட்களில் 133 படுகொலை.. மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு? சீமான் கேள்வி!

31 நாட்களில் 133 படுகொலை.. மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு? சீமான் கேள்வி!

திட்டங்கள் 

31,000 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 1.16 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. விக்கிரவாண்டிக்கான திட்டங்கள் தேர்தலுக்குப் பின் செயல்படுத்தப்படும்.

முதல்வர் ஒவ்வொரு பணியையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார் - உதயநிதி பெருமிதம்! | Minister Udayanidhi Stalin Speech In Vikravandi

விக்கிரவாண்டியில் பாலம், சாலை உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும். நந்தன் கால்வாய் திட்டப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விக்கிரவாண்டியில் ரூ.75 லட்சத்தில் பூங்கா அமைக்கப்படும். அன்னியூர் சிவாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.