'மன்னித்து விடுங்கள்' - மருத்துவ மாணவி 6வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை - அதிர்ச்சி காரணம்!

Karnataka India Death
By Jiyath Nov 14, 2023 04:08 AM GMT
Report

உடல் பருமன் பிரச்சனை காரணமாக மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.       

மாணவி தற்கொலை

கர்நாடகா மாநிலம் மங்களூரு டவுன் குந்திகான் பகுதியில் ஏ.ஜே. மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி (20) என்ற மாணவி, எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கல்லூரியின் தங்கும் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். இந்நிலையில் தங்கும் விடுதியின் 6வது மாடியிலிருந்து பிரக்ருதி ஷெட்டி கீழே குதித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அந்த மாணவி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தங்கும் விடுதியில் சோதனை செய்ததில், மாணவியின் உருக்கமான கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.

'அந்த மனசுதான் சார்' - நாடு திரும்பும் முன் சாலையோர ஏழைகளுக்கு உதவிய ஆப்கன் வீரர்!

'அந்த மனசுதான் சார்' - நாடு திரும்பும் முன் சாலையோர ஏழைகளுக்கு உதவிய ஆப்கன் வீரர்!

உருக்கமான கடிதம்

அந்த கடித்தத்தில் "எனது உடல் மிகவும் பருமனாக உள்ளது. உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. அடிக்கடி உடல்நலமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்து நான் தற்கொலை முடிவை தேடிக்கொள்கிறேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்" என பிரக்ருதி ஷெட்டி உருக்கமாக எழுதியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமன் பிரச்சனை காரணமாக மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.