திருமணமான மகளுக்கு சொத்தில் பங்கு உண்டா - சட்டம் என்ன சொல்கிறது?

Law and Order
By Sumathi May 05, 2024 12:23 PM GMT
Report

பெண்கள் தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியுமா?

சொத்தில் உரிமை 

ஹிந்து வாரிசுரிமை (திருத்தியமைக்கப்பட்டது) சட்டம் 2005 இன் படி அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில் மகனுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதேபோல மகளுக்கும் இருக்கிறது. திருமணம் ஆனாலும், ஆகவில்லை என்றாலும் இந்த சட்டம் பொருந்தும்.

திருமணமான மகளுக்கு சொத்தில் பங்கு உண்டா - சட்டம் என்ன சொல்கிறது? | Married Women Inherit Father Properties

அப்பா உயில் எழுதாத பட்சத்தில், கிளாஸ் 1 சட்டபூர்வமான வாரிசுகள் என்று கருதப்படும் நேரடி வாரிசுகளுக்கு (குழந்தைகள்) பாலின வேறுபாடு இன்றி, அப்பாவின் சுய சம்பாத்தியத்தில் சம பங்கு உள்ளது.

தாத்தாவின் சொத்தில் யாருக்கு உரிமை - மகனுக்கா? பேரனுக்கா?

தாத்தாவின் சொத்தில் யாருக்கு உரிமை - மகனுக்கா? பேரனுக்கா?

சட்டம் சொல்வதென்ன?

ஆனால் ஒருவேளை திருமணமான பெண்ணின் அப்பா தான் சுயமாக சம்பாதித்த சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால் அதில் பங்கு கேட்க முடியாது.

திருமணமான மகளுக்கு சொத்தில் பங்கு உண்டா - சட்டம் என்ன சொல்கிறது? | Married Women Inherit Father Properties

சுய சம்பாத்தியம் இல்லாமல் பூர்வீக சொத்தாக இருந்தால் அதில் அனைவருக்கும் சமமான பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

விவாகரத்து ஆகி இருந்தாலும், முன்னாள் கணவர் மற்றொரு பெண்ணை மணந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலுமே, இந்தப் பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை உள்ளது.