நயன்தாராவுக்கு இன்று திருமணம் - பாதுகாப்பு பணியில் பவுன்சர்கள்
நடிகை நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமண விழாவில் இன்று காலை நடைபெறுவதை அடுத்து 80-க்கும் அதிகமான பவுன்சர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா இவரும் விக்கேஷ் சிவனும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நயன்தாரா திருமணம்
இவர்களின் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை நடைபெறுகிறது.
ஹோட்டலில் திருமணத்துக்கு பிரத்யேகமாக கண்ணாடி மாளிகை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹோட்டலில் விருந்தினர்களுக்காக அதிகமான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருமண விழாவையொட்டி விக்னேஷ் சிவனின் சகோதரிக்கு நயன்தாரா 30 பவுன் தங்க நகை வாங்கி பரிசளித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக பரிசு பொருட்கள் வழங்கி இருக்கிறார்.
திருமணம் நடைபெறும் கடற்கரை விடுதியின் முன்புறம், கடற்கரைப் பகுதி என அனைத்து இடத்திலும் 80க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
நடிகை நயன்தாராவின் திருமணம் இன்னும் சற்று நேரத்தில் மாமல்லபுரம் அருகில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொடங்க இருக்கின்றது.