விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண் - அந்தரங்க இடங்களில் தொட்டு எல்லை மீறிய முதியவர்!
Sexual harassment
Bengaluru
Flight
By Sumathi
விமானத்தில் பெண்ணுக்கு, முதியவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
பெங்களூரு விமானம்
ஆந்திரா, திருப்பதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், பிராங்பெர்டில் இருந்து விமானத்தில் பெங்களூரு வந்தார். அப்போது அவர் விமானத்தில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அருகில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு தகாத முறையில் நடந்துள்ளார்.
பாலியல் தொல்லை
இதனை தாங்க முடியாமல் அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து, தனக்கு வேறு இருக்கை ஒதுக்குமாறு கோரியுள்ளார்.
அதன்பின், விமானம் தரையிறங்கியதும் அந்த பெண் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார், கைது செய்துள்ளனர்.