சிறுவனை மிரட்டி பாலியல் தொல்லை செய்த திருநங்கை - கொடூர சம்பவம்!

Sexual harassment Kerala Child Abuse Crime
By Sumathi Feb 08, 2023 05:16 AM GMT
Report

சிறுவனுக்கு, திருநங்கை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 பாலியல் தொல்லை

கேரளா, திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் சச்சு சாம்சன்(34). திருநங்கையான இவருக்கும் 16 வயது சிறுவனுக்கும் இடையே ரயிலில் செல்லும்போது பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்துள்ளனர். தொடர்ந்து தம்பானூர் பகுதிக்கு சிறுவனை அழைத்துச் சென்ற திருநங்கை, பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

சிறுவனை மிரட்டி பாலியல் தொல்லை செய்த திருநங்கை - கொடூர சம்பவம்! | Transgender Sexually Abusing Minor Boy Kerala

அங்கு செல்ல சிறுவன் மறுத்த நிலையில், திருநங்கை அவரை மிரட்டி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், பயம் காரணமாக இதுகுறித்து அச்சிறுவன் தன் பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. அதனையடுத்து திருநங்கை சிறுவனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.

திருநங்கைக்கு சிறை

ஆனால் சிறுவன் அழைப்பை எடுக்காமல் எண்ணை ப்ளாக் செய்துள்ளார். சிறுவனை கவனித்த பெற்றோர் நடவடிக்கை சரியில்லாத்தால் விசாரித்துள்ளனர். அப்போது திருநங்கை பாலியல் தொல்லை அளித்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து திருநங்கையை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் திருநங்கைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.