பெண் துப்புரவு தொழிலாளியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை - வருமானத்துறை ஊழியர் கொடுமை!

Chennai Crime
By Sumathi Dec 24, 2022 08:17 AM GMT
Report

பெண் துப்புரவு தொழிலாளியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்த வருமானவரித்துறை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தொல்லை 

சென்னை, நுங்கம்பாக்கத்தில் வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஆண், பெண் அதிகாரிகள் வேலை பார்த்து வருகிறார்கள். இதில், கடந்த 12 வருடமாக மூத்த வரி விதிப்பு அதிகாரியாக அண்ணா நகரை சேர்ந்த ரெக்ஸ்(36) என்பவர் வேலை செய்து வருகிறார்.

பெண் துப்புரவு தொழிலாளியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை - வருமானத்துறை ஊழியர் கொடுமை! | Income Tax Employee Harassing A Female Cleaner

மேலும், அதே அலுவலகத்தில் மணலியைச் சேர்ந்த கணவனை இழந்த 36 வயது பெண் கடந்த ஆறு வருடங்களாக அலுவலக சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். அப்போது, திடீரென்று அப்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார்.

தற்கொலை முயற்சி

இதனால் அதிர்ச்சியடைந்த பெண், அலறிக்கொண்டே அறையை விட்டு ஓடியுள்ளார். தொடர்ந்து, மனமுடைந்த பெண் வீட்டில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதன்பின் புகாரின் பேரில், ரெக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.