லிஃப்ட் தருவதாக அழைத்த இளைஞர்; நம்பிச்சென்ற இளம்பெண் - நேர்ந்த கொடூரம்!

Sexual harassment Crime Mumbai
By Sumathi Oct 10, 2024 06:13 AM GMT
Report

லிஃப்ட் தருவதாக கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், மும்பையில் உள்ள மிரா ரோடு பகுதியில் தனது மாமா வீட்டில் வசித்து வருகிறார்.

லிஃப்ட் தருவதாக அழைத்த இளைஞர்; நம்பிச்சென்ற இளம்பெண் - நேர்ந்த கொடூரம்! | Man Rape Woman By Claiming To Give Lift In Mumbai

இந்நிலையில் அந்த பெண் இரவு உறவினர் ஒருவரின் வருகைக்காக பாந்த்ரா ரயில் நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் உறவினர் வராததால் அந்த பெண் பயத்தில் அழுதுள்ளார்.

70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது இளைஞன் - கொடூர சம்பவம்!

70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது இளைஞன் - கொடூர சம்பவம்!

இளைஞர் கைது

இதனைப் பார்த்த 31 இளைஞர் ஒருவர், அந்த பெண்ணிடம் தனது காரில் லிப்ட் தருவதாக கூறியுள்ளார். அதை நம்பி காரில் ஏறிய இளம் பெண்ணை, மஹிம் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

லிஃப்ட் தருவதாக அழைத்த இளைஞர்; நம்பிச்சென்ற இளம்பெண் - நேர்ந்த கொடூரம்! | Man Rape Woman By Claiming To Give Lift In Mumbai

பின் அந்தப் பெண்ணை மீண்டும் பாந்த்ரா ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு, தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனே இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், சாண்டாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.