ரூ.30 கோடி லாட்டரியை காதலிக்கு கொடுத்த இளைஞர் - பாய் பிரண்டுடன் எஸ்கேப் ஆன பெண்
30 கோடி லாட்டரியை வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆன காதலி மீது காதலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நம்பிய காதலன்
கனடா, வின்னிபெக் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் கேம்பல். இவர் 5 மில்லியன் கனடா டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 கோடி) லாட்டரியை ஜெயித்துள்ளார்.
ஆனால் சரியான அடையாள அட்டை போன்ற சில காரணங்களால் அவரால் அந்த பரிசுத் தொகையை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தனது காதலி கிரிஸ்டல் ஆன் மெக்கேவை நம்பி லாட்டரியை கொடுத்து, பரிசுத் தொகையை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
காதலி எஸ்கேப்
அந்த பெண்ணும் லாட்டரியுடன் சென்று பரிசுத் தொகையைப் பெற்றுள்ளார். தொடர்ந்து தனது இன்னொரு பாய் பிரண்ட்டோடு எஸ்கேப் ஆகியுள்ளார். இதனையடுத்து மனமுடைந்த காதலன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து தாக்கல் செய்துள்ள மனுவில்,
"சில நாட்களில் மெக்கே மாயமானார். நாங்கள் ஹோடலில் ரூம் எடுத்து தங்கியிருந்தோம். அவர் அங்கு வரவில்லை. என்னோடு இருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டார். கஷ்டப்பட்டு அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தேன். அப்போது நான் உடைந்து போய்விட்டேன்.
அவர் பணத்தை வாங்கிய பிறகு அவரது காதலுடன் சென்றுவிட்டார். எனது மெசேஜ், கால் என எதற்கும் பதிலில்லை. சமூக வலைத்தளங்களிலும் பிளாக் செய்துவிட்டார். இதன் காரணமாகவே நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்" என வேதனை தெரிவித்துள்ளார்.