7 வருடம் ஷாம்பூவே யூஸ் பண்ணல.. தலைமுடிக்கு என்னாச்சு தெரியுமா? - இணையத்தில் வைரல்!
இளைஞர் ஒருவர் 7 வருடமாக தலைக்கு ஷாம்பூவே பயன்படுத்தாததால் அதன் விளைவு குறித்து வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
நோ ஷாம்பு
யூடியூப் சேனலை நடத்தி வரும் எய்டன் என்பவர் “7 இயர்ஸ் நோ ஷாம்பூ ரிசல்ட்” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் டிஸ்கிரிப்ஷனில் ஏழு வருடம் ஷாம்பு பயன்படுத்தாமல் இருப்பது எவ்வாறு என்னுடைய தலையையும், தலைமுடியையும் மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "இன்றோடு கிட்டத்தட்ட ஷாம்பூவை பயன்படுத்துவதை நிறுத்தி ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது எந்த ஒரு கண்டிஷனரும் பயன்படுத்தாமல் இனி என்னுடைய தலை முடி மற்றும் தலையின் ஆரோக்கியத்தை சோதனை செய்து பார்க்க போகிறேன்” என்று கூறுகிறார்.
இதில் முன்னர் அவர் தலையில் ஏற்பட்ட பொடுகை நீக்க ஆன்ட்டி டேன்ட்ரஃப் ஷாம்புவை தினசரி உபயோகித்து வந்த போது எடுத்த புகைப்படத்தையும் இணைத்து, இது குறித்து பேசியுள்ளார்.
வீடியோ பதிவு
இந்நிலையில், அவர் அந்த வீடியோவில், "நான் இந்த பிரச்சினையை சரி செய்த முடிவு எடுத்தேன் எனவே இனி ஷாம்புவை பயன்படுத்த போவதில்லை என்ற முடிவுக்கு வந்தேன்” என்றும் மேலும் அதனால் நல்லவிதமான முடிவுகள் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஷாம்பு பயன்படுத்தும் போது இருந்ததைவிட ஷாம்பு பயன்படுத்துவதை நிறுத்திய பின்பு தன்னுடைய தலை முடியின் ஆரோக்கியமும், அடர்த்தியும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பதாக கூறினார்.
தலையில் அதிகம் எண்ணெய் சுரந்து பிசுபிசு என்று இருப்பதற்கு முக்கிய காரணம் ஷாம்பு தான் என்றும், நாம் ஷாம்பு பயன்படுத்தும் போது அவை நமது தலையில் இயற்கையாக சுரக்கும் சீபம் என்று அழைக்கப்படும் எண்ணெய் சுரப்பியை முழுவதுமாக நீக்கி விடுவதும் அதனால் அதன் பிறகு தலையில் சீபம் சுரப்பதே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை அனைவரும் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்றும் கூறினார். இவரது இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.