லாஸ் ஏஞ்சல்ஸில் திடீர் ஊரடங்கு உத்தரவு - என்ன காரணம்?
லாஸ் ஏஞ்சல்ஸில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்ற சோதனைகளுக்கு எதிராக ஐந்தாவது நாளாகப் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மேயர் கரேன் பாஸ் உள்ளூர் அவசரநிலையை அறிவித்துள்ளார்.
நகரின் மையப்பகுதியில் இரவு நேர ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார். 5, 10, மற்றும் 110 ஆகிய நெடுஞ்சாலைகளால் சூழப்பட்ட ஒரு சதுர மைல் பரப்பளவிற்கு இது பொருந்தும். "நாசவேலைகளையும், கொள்ளையடிப்புகளையும் தடுக்க நான் உள்ளூர் அவசரநிலையை அறிவித்து,
குடியேற்ற சோதனை
டவுன்டவுன் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளேன். ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள், அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்." என்று தெரிவித்துள்ளார். குடியிருப்பாளர்கள், ஊழியர்கள், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் மற்றும் வீடற்றவர்களுக்கு ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஊரடங்கு உத்தரவு மற்றும் பலத்த பாதுகாப்பு இருந்தபோதிலும், குடியேற்ற சமூகங்கள் மீதான அநீதியான அடக்குமுறைக்கு எதிராகத் தங்கள் போராட்டங்களைத் தொடரப் போவதாகப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.