8 நிமிடங்களில் இறந்து மீண்டும் உயிர் பெற்ற பெண் - அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
இறந்து மீண்டும் உயிர் பெற்ற பெண் பகிர்ந்துள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளது.
மீண்டும் உயிர்பெற்ற பெண்
கொலராடோவைச் சேர்ந்தவர் பிரியானா லாஃபர்டி(33). இவர் மயோக்ளோனஸ் டிஸ்டோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். இது பொதுவாக கழுத்து, உடல் மற்றும் கைகள் போன்ற பகுதிகளைப் பாதிக்கிறது.
இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. இந்நிலையில் இவர் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் நிலை காரணமாக பாதிப்பில் இருந்தார். இந்நிலை குறித்து பகிர்ந்துள்ள அவர், தான் தயாராக இருக்கிறேனா என்று கேட்கும் ஒரு குரல் கேட்டது. சிறிது நேரத்தில் அனைத்தும் இருட்டாகிவிட்டது.
மருத்துவர்களால் மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், தனது நினைவு தன்னுடன் இறக்கவில்லை. மரணம் ஒரு மாயை. ஏனென்றால், நமது ஆன்மா ஒருபோதும் இறக்காது. நமது நினைவு உயிருடன் இருக்கும். அந்த நிலையில் நமது எண்ணங்கள் அங்கு யதார்த்தத்தை வடிவமைக்கின்றன என்பதை உணர்ந்தேன்.
மூளையின் செயல்பாடு
அதற்கு நேரம் எடுக்கும் மற்றும் இது ஒரு ஆசீர்வாதம். திடீரென்று என் உடல் உடலிலிருந்து பிரிக்கப்பட்டது. நான் முற்றிலும் அசையாமல் இருந்தேன். ஆனால், நான் முழுமையாக உயிருடன், விழிப்புடன், முன்பை விட அதிகமாக உணர்ந்தேன். வலி இல்லை. அமைதி மற்றும் தெளிவின் ஆழமான உணர்வு மட்டுமே இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெண் சுமார் 8 நிமிடங்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார். ஒருவர் உயிரிழந்த பிறகு, இதயம் துடிக்கவில்லை என்றாலும், மருத்துவ ரீதியாக உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும் மூளையின் செயல்பாடு சில நிமிடங்களுக்குத் தொடரக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.