Sunday, Jun 29, 2025

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் - விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!

Law and Society Trust Sexual harassment Crime
By Vidhya Senthil 8 months ago
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 வழக்கு தொடர்பாக ஆலோசிக்க அழைத்து இளம்பெண்ணை வழக்கறிஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  இளம்பெண்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதுடைய இளம்பெண். இவர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் முதுநிலை வணிக நிர்வாகங்பட்டப்படிப்புமுடித்துள்ளேன்.

sexual harassment

எனது பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். எனது தாயாரின் ஓய்வூதியம் பணம் கிடைப்பதற்காக எனது தோழியின் அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரைச் சந்தித்துப் பேசினேன்.

வீடியோ காலில் வந்த நிர்வாண பெண்.. நள்ளிரவில் எம்எல்ஏ செய்த காரியம்!

வீடியோ காலில் வந்த நிர்வாண பெண்.. நள்ளிரவில் எம்எல்ஏ செய்த காரியம்!

மேலும் வழக்கு தொடர்பாக அடிக்கடி சந்தித்துப் பேசினேன்.இந்த நிலையில் கடந்த 9-6-2023 அன்று என்னை செல்போனில் தொடர்பு கொண்ட வழக்கறிஞர் வழக்கு தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் எனக்கூறினார். அப்போது அவரது அலுவலகத்துக்கு வரவழைத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.

பாலியல் வன்கொடுமை 

மேலும் அதனை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து அவர் ஆசைக்கு இனைக்க மறுத்ததால் தொடர்ந்து மிரட்டி வந்தார். இதற்கிடையே நான் கார்ப்பமானேன். பின்னர் கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்து அந்த கருவையும் கலைத்துள்ளார்.

arrest

இதுதொடர்பாக வழக்கறிஞரிடம் கேட்டபோது, எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்.மேலும் எனது ஆபாசப் படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டினார். எனவே சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த புகாரி அடிப்படையில் வழக்கறிஞர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டார்.