இறந்ததாக கருதிய உறவினர்கள் - திடீரென மூதாட்டி இறுதிச் சடங்கில்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்!

Viral Photos Crime Thanjavur
By Vidhya Senthil Oct 21, 2024 03:33 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

இறந்து விட்டதாக நினைத்து இறுதிச் சடங்கு செய்வதற்கு உறவினர்கள் தயார் ஆன நிலையில் மூதாட்டி திடீரென எழுந்து உட்கார்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 105 வயதான மாரி. இவர் கணவர் சில ஆண்டுகளுக்கு இறந்த நிலையில் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

death

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக மாரி உடல் நிலை அவப்போது பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சுழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரியாயிக்கு உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டது.

உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டி இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடத்திய கிராம மக்கள்...!

உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டி இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடத்திய கிராம மக்கள்...!

அப்போது எந்த அசைவும் இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் இறந்து விட்டதாக நினைத்து அக்கம் பக்கத்தினரிடையே தெரிவித்துள்ளனர்.

  மூதாட்டி

இதனைத் தொடர்ந்து மாரிக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு உறவினர்கள் தயாராகினர் அப்போது திடீரென மூதாட்டி எழுந்து உட்கார்ந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

தஞ்சாவூர்

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தற்போது உடல் நலம் தேறி அவரது வேலைகளை அவரே செய்து வியப்பூட்டி வருகிறார்