பயமா இருக்கு, இது யாருக்குமே நடக்க கூடாது - கீர்த்தி சுரேஷ் வேதனை!

Sumathi
in பிரபலங்கள்Report this article
Deepfake வீடியோ குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
ராஷ்மிகா மந்தனாவின் Deepfake வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் இருப்பது ராஷ்மிகா என பலரும் நினைத்த நிலையில், அது AI தொழில்நுட்ப உதவியால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்பது தெரிய வந்தது.
இதற்கு ராஷ்மிகாவே வேதனை தெரிவித்து பதிவிட்டிருந்தார். தொடர்ந்து பல பிரபலங்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய அரசு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை எனவும் எச்சரித்துள்ளது.
Deepfake
அதன் வரிசையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், தற்போது வலம் வரும் Deepfake வீடியோவால் பயமாக இருக்கிறது. அந்த வீடியோவை உருவாக்கியவர் தொடர்புடையவரை கவலை அடைய வைக்காமல் தன் நேரத்தை பயனுள்ளதாக செய்திருக்கலாம்.
தற்போதுள்ள தொழில்நுட்பம் நமக்கு வரமா, சாபமானு தெரியவில்லை. இந்த பிளாட்ஃபார்மை பயன்படுத்தி அன்பு, பாசிட்டிவிட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மனிதகுலத்தை கடவுள் காப்பாற்றட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.