விமான சாகச நிகழ்ச்சியில் 240 பேர் மயக்கம் - இனி.. ஆவேசமான கனிமொழி!

Smt M. K. Kanimozhi Tamil nadu DMK
By Vidhya Senthil Oct 07, 2024 05:02 AM GMT
Report

 சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

விமான சாகச நிகழ்ச்சி

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக் காண 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

kanimozhi

மேலும் வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மெரினாவிலிருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

‘இதெல்லாம் தப்பு... கால்ல விழக்கூடாது?’ காலை தொட்டு வணங்க முயன்ற சிறுமி - கனிமொழி எம்.பி. அறிவுரை

‘இதெல்லாம் தப்பு... கால்ல விழக்கூடாது?’ காலை தொட்டு வணங்க முயன்ற சிறுமி - கனிமொழி எம்.பி. அறிவுரை

93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

கனிமொழி

இந்த சம்பவத்துக்குக் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளதாவது: , “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியைக் காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும்,

indian air force

வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.