நயன்தாரா இனி நடிக்காமல் இருந்தால் போதும் - கொந்தளிக்கும் கோலிவுட் வட்டாரம்..!
திருமணத்திற்கு பிறகு நயன்தாரா பல விதிமுறைகளை விதித்துள்ளதால் அவர் படத்தில் நடிக்காமல் இருந்தாலே போதும் என்ற அளவிற்கு கோலிவுட் வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுகம்
ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா .அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன்,தலைமகன், ஈ, சிவாஜி, பில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
காதல் திருமணம்
இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
கட்டுப்பாடு
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் முத்தக் காட்சி,நடிகருடன் நெருக்கமான காட்சி உள்ளிட்ட கவர்ச்சியான காட்சிகளில் இனி நடிக்க மாட்டேன் என நயன்தாரா கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மற்றும் இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பு வரையில் எந்த ஒரு படத்தின் கடினமான காட்சிகளிலும் எவ்வளவு நேரமானாலும் நடித்து முடித்துக் கொடுத்து செல்வாராம்.
தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனவும் கவர்ச்சி உடைகளை அணி மாட்டேன் என கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
நயன்தாரா,விக்னேஷ் சிவனை காதலித்த பின்பு அவருக்கான படவாய்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தற்போது திருமணத்திற்கு பிறகும் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இத்தனை கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் கோலிவுட் வட்டாரம் காட்டம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.