இன்னும் 3 வருஷத்தில் ஐபிஎல் இருக்காது.. ஆனால், அஸ்வின் உருக்கம்!

Ravichandran Ashwin IPL 2024
By Sumathi Mar 29, 2024 01:30 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் பயணம் குறித்து அஸ்வின் மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் 2024

2024 ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், "சில சமயங்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தானா? என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ravichandran ashwin

ஏனெனில் பல சமயங்களில் விளையாட்டு பின்னே சென்று விடுகிறது. அது மிகவும் பெரியது. விளம்பர படப்பிடிப்புகளுக்காக நாங்கள் பயிற்சி செய்து கொண்டு இருக்கிறோம். அந்த இடத்துக்கு ஐபிஎல் வந்துள்ளது.

500-வது விக்கெட் வீழ்த்திய நாள்; ஐசியூவில் அம்மா.. உடைந்த அஸ்வின் - மனைவி பேட்டி!

500-வது விக்கெட் வீழ்த்திய நாள்; ஐசியூவில் அம்மா.. உடைந்த அஸ்வின் - மனைவி பேட்டி!

அஸ்வின் பேட்டி

ஐபிஎல்-க்கு நான் வரும் போது ஒரு இளைஞனாக, பெரிய வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்பினேன். 10 வருடங்கள் கழித்து ஐபிஎல் எப்படி இருக்கும் என்று அப்போது நான் நினைக்கவில்லை. பல சீசன்கள் ஐபிஎல்லில் இருந்ததால், ஐபிஎல் மிகப்பெரியது என்று என்னால் சொல்ல முடியும்.

இன்னும் 3 வருஷத்தில் ஐபிஎல் இருக்காது.. ஆனால், அஸ்வின் உருக்கம்! | Ipl 2024 Ravichandran Ashwin About Journey

ஐபிஎல்லில் இருக்கும் வளர்ச்சியை யாரும் எதிர்பார்க்கவில்லை. சிஎஸ்கேயில் இருந்தபோது ஸ்காட் ஸ்டைரிஸுடன் பேசியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

ஐபிஎல் ஆரம்ப சீசன்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடும் போது,​​இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஐபிஎல் நீடிக்கும் என்று நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.