இந்திய அணி பாகிஸ்தான் வரக்கூடாது; நோக்கமே இதுதான் - முன்னாள் வீரர் காட்டம்!
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரக் கூடாது என்று கனேரியா கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. இதில், 2008ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி ஒருமுறை கூட பாகிஸ்தான் சென்று இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.
எனவே, ஆசியக் கோப்பை போல் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்த பிசிசிஐ தரப்பில் முயற்சிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் கனேரியா,
கனேரியா தகவல்
பாகிஸ்தான் உள்ள சூழலை பார்க்கும் போது, இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு பயணிக்க கூடாது. இதனை பாகிஸ்தான் அரசும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது வீரர்களின் பாதுகாப்பு தான் முக்கியம்.
அதன்பின் 2வது விஷயம் வீரர்களுக்கான மரியாதை. இன்னும் சில விஷயங்களும் பட்டியலில் சேரும்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டிலும், பாகிஸ்தானிலும் உள்ள பிரச்சனைகளை சரி செய்யாமல் அழைப்பது சரியாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.