1 சவரன் நகை, ரூ.50 ஆயிரம்; அள்ளிக்கொடுக்கும் அரசு - எப்படி விண்ணப்பிப்பது?
திருமண நிதி உதவித் திட்டம் குறித்து பார்ப்போம்.
திருமண நிதி உதவி
தமிழ்நாடு அரசு குடும்பத்தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் தற்போது 1.14 கோடி குடும்ப தலைவிகள் மாதந்தோறும் 1000 ரூபாயை வங்கிக் கணக்கில் நேரடியாக பெற்று பயனடைந்து வருகிறார்கள்.
தொடர்ந்து அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இரண்டு வகையான திட்டம் உள்ளது.
முதல் திட்டத்தில் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மின்னணு பரிமாற்ற சேவை மூலமாக வழங்கப்படும். இத்துடன் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
விண்ணப்ப விவரம்
இரண்டாவது இடத்தில் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவும் மின்னணு பரிமாற்ற சேவை மூலமாக வழங்கப்படும். இதோடு, திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.
முதல் திட்டத்தில் பயன்பெற கல்வி தகுதி இல்லை. இரண்டாவது திட்டத்தில் பயன்பெற பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். திருமணத்துக்கு 40 நாள்கள் முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்லைனில்: இ-சேவை மையங்கள் மூலம் https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html இல் விண்ணப்பிக்கலாம்.