Birthday Party: வெடித்து சிதறிய ஹீலியம் பலூன் - 4 குழந்தைகள் உட்பட 5 பேருக்கு நேர்ந்த சோகம்!
ஹீலியம் பலூன் வெடித்து சிதறியதில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வெடித்த ஹீலியம் பலூன்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பெலத்தூர் பகுதியில் ஆதித்யா குமார் என்பவர் தனது 3 வயது மகளின் பிறந்தநாளை வீட்டில் கொண்டாடியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது மொட்டை மாடி மேல் பறக்கவிடப்பட்டிருந்த ஹீலியம் பலூன் உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் திடீரென வெடித்து சிதறியது.
இதில் தீப்பொறி விழுந்ததால் அங்கிருந்த ஆதித்யா குமார், அவரது மகள் மட்டுமின்றி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 3 குழந்தைகளுக்கும் கை மற்றும் முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீசார் விசாரணை
இந்நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பலூனில் ஹீலியம் வாயுவிற்கு பதிலாக, வேறு ஏதாவது வாயு நிரப்பப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.