6வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரம் - 2 நபர்களுக்கு தூக்கு தண்டனை!

Sexual harassment India Death
By Jiyath Oct 05, 2023 05:13 AM GMT
Report

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட வழக்கில் திரிபுரா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுமி கொலை

கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி திரிபுரா மாநிலத்தில் தர்மாநகர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

6வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரம் - 2 நபர்களுக்கு தூக்கு தண்டனை! | Tripura Court 2 To Death Rape Murder Of Minor Girl

வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். சில நாட்கள் கழித்து வீட்டிற்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

சிறுமியை பரிசோதனை செய்ததில், சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் கடத்தல் வழக்கை கற்பழிப்பு மற்றும் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

ஆபாச படத்தில் நடித்தேனா? உங்கள் வீட்டு பெண்களை இப்படி பேசினால் - நடிகை ரோஜா கண்ணீர்!

ஆபாச படத்தில் நடித்தேனா? உங்கள் வீட்டு பெண்களை இப்படி பேசினால் - நடிகை ரோஜா கண்ணீர்!

தூக்கு தண்டனை

இதில் சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த 2 பேர், சிறுமியை கற்பழித்து கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த 2 பேர் மீதான வழக்கை தலைநகர் அகர்தலாவில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் விசாரித்து வந்தது.

6வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரம் - 2 நபர்களுக்கு தூக்கு தண்டனை! | Tripura Court 2 To Death Rape Murder Of Minor Girl

4 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையில் அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 30ம் தேதி இருவரையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து சிறப்பு போக்சோ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது