இனியும் இப்படி பண்ணா...Ban செஞ்சிருவோம்!! BCCI'யின் எச்சரிக்கை மணி - திருந்துவாரா ஹர்டிக்
ஹர்டிக் பாண்டியாவிற்கு பிசிசிஐ அதிரடியாக அபராதம் விதித்துள்ளது.
ஹர்திக் பாண்டியா
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இந்த ஆண்டு பதவியேற்றுள்ள ஹர்டிக் பாண்டியா பெரும் இன்னலை சந்தித்து வருகின்றார். அணியின் தொடர் தோல்வி, Playoff சுற்றில் இருந்து வெளியேற்றம், அணிக்குள் பூசல், ரோகித் பிரச்சனை, ரசிகர்கள் விமர்சனம் என பல சிக்கலை அவர் சந்தித்து வருகின்றார்.
அத்துடன் சேர்த்து அவரது ஆட்டமும் சொதப்பலாகவே உள்ளது. பேட்டிங் - பௌலிங் என இரண்டிலும் அவர் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
அவருக்கு சிக்கல்களும், எதிர்ப்புகளும் எழுந்து வரும் நிலையில், பிசிசிஐ அவருக்கு அதிரடியாக ஃபைன் போட்டுள்ளது. நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இரண்டாவது இன்னிங்சில் பந்துவீசிய மும்பை அணி கொடுக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக பந்துவீச எடுத்துக்கொண்டதால், அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியாவிற்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது 2-வது முறை என்பதால் அவர் இன்னும் ஒரு போட்டியில் இப்படி தொடர்ந்தால், அவருக்கு 30 லட்ச அபராதம் விதிப்பதுடன், ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்றும் நினைவூட்டப்பட்டுள்ளது.