மரம் வளர்த்து பராமரித்தால் தங்க காசு - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு

M K Stalin M Karunanidhi P. K. Sekar Babu
By Thahir Jun 13, 2022 05:58 AM GMT
Report

மரம் வளர்த்து அதை பராமரித்து வந்தால் தங்க காசு பரிசளிக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

கருணாநிதி பிறந்த நாள்

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 3-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஜுன் 3-ம் தேதி அன்று முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும்,விருதுகளையும் வழங்கினார்.

இதனிடையே சென்னை அண்ணாநகர் கிழக்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணி சார்பில் 9999 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்.

தங்க நாணயம் பரிசு

அப்போது பேசிய அவர்,முறையாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருபவர்களுக்கு அடுத்த ஆண்டு கலைஞர் பிறந்த நாளில் தங்க நாணயம் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மரம் வளர்த்து பராமரித்தால் தங்க காசு - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு | Gold Coin If The Tree Is Grown And Maintained

தமிழகம் முழுவதும் கலைஞர் பிறந்த நாளில் மரக்கன்றுகளை நட்டு,அதனை நன்றாக பரமாரித்து வருபவர்களுக்கு குழுவை வைத்து தேர்வு செய்து அடுத்த ஆண்டு இதே நாளில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதை ஊக்குவிப்பதன் அடிப்படையில் இந்த கௌரவம் செய்யப்படும் என அவர் கூறினார்.

பள்ளிக்கு துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!