கடற்கரை உணவகங்களில் மீன் குழம்பு-சோறு விற்பனை - அரசு முக்கிய உத்தரவு!

goa
By Sumathi Oct 10, 2023 08:13 AM GMT
Report

கடற்கரை உணவகங்களில் மீன் குழம்பு - சோறு விற்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பாரம்பரிய உணவு

கோவா மாநில வருவாயில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு சுற்றியுள்ள கடற்கரைகளில் சிறிய உணவகங்கள், மதுக்கூடங்கள் ஏராளமாக உள்ளன.

கடற்கரை உணவகங்களில் மீன் குழம்பு-சோறு விற்பனை - அரசு முக்கிய உத்தரவு! | Goa Govt Says Beach Hotels Should Sale Fish

இந்த கடைகளில் வட மாநில மற்றும் மேற்கத்திய உணவு வகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. அம்மாநில பாரம்பரிய உணவுகள் விற்கப்படுவதில்லை.

கனவு நகரமான கோவாவின் வரலாறும் - தேசியக் கட்சிகளின் அரசியல் நிலைப்பாடும்..!

கனவு நகரமான கோவாவின் வரலாறும் - தேசியக் கட்சிகளின் அரசியல் நிலைப்பாடும்..!

அரசு உத்தரவு

இந்நிலையில், கடற்கரையை ஒட்டியுள்ள சிறிய கடைகளுக்காக புதிய கொள்கையை மாநில அரசு வகுத்துள்ளது. அதன்படி, ''கடற்கரையில் உள்ள உணவகங்கள் மற்றும் மதுக்கூடங்களில், கோவா பாரம்பரிய உணவுகள் கட்டாயம் விற்பனை செய்யப்பட வேண்டும்.

கடற்கரை உணவகங்களில் மீன் குழம்பு-சோறு விற்பனை - அரசு முக்கிய உத்தரவு! | Goa Govt Says Beach Hotels Should Sale Fish

குறிப்பாக, தேங்காய் பயன்படுத்தி செய்யப்படும் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற உணவான, மீன் குழம்பு - சோறு கட்டாயம் இடம் பெற வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன் காவுட்னே தெரிவித்துள்ளார். இதன்மூலம் சுற்றுலாப் பயணிகளும் பயன் பெறலாம என கருதப்படுகிறது.