காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற ஜோடி - கடலில் மூழ்கி பரிதாப பலி
கோவா சென்ற காதல் ஜோடி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதல் ஜோடி
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் காதல் ஜோடி விபு சர்மா (27), சுப்ரியா துபே (26). விபு டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், காதலர் தினத்தை கொண்டாட கடந்த சில நாட்களுக்கு முன் விபு சர்மாவும், சுப்ரியா துபேவும் கோவா சென்றுள்ளனர். அவர்கள் அங்கு தங்கி பல்வேறு சுற்றுலா சென்றுள்ளனர். தொடர்ந்து இருவரும் பலோலம் கடற்கரையில் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது எதிராராத விதமாக இருவரும் அலையில் சிக்கி கடலில் மூழ்கினர்.
பரிதபா பலி
இது குறித்து மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்தவர்கள் கடலில் மூழ்கிய 2 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
தற்போது இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.