சுரங்கத்தில் சிக்கிய 41 பேர்.. வெளியான முதல் வீடியோ - என்ன நிலைமை?

Viral Video Uttarakhand Accident
By Vinothini Nov 21, 2023 05:51 AM GMT
Report

விபத்தில் சிக்கிய சுரங்க தொழிலாளர்களின் வீடியோ வெளியாகியுள்ளது.

விபத்து

உத்தரகாண்ட், யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில், 40 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ளனர்.

first-video-of-tunnel-emerge-victims-released

சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதில் சிக்கியுள்ளவர்களுக்கு குழாய்கள் மூலம் சுரங்கத்தில் ஆக்ஸிஜன் மற்றும் திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

ரவா கிச்சடி உணவு; தகவல் தொடர்புக்கு வாக்கி-டாக்கி - 41 பேரின் தற்போதைய நிலைமை என்ன?

ரவா கிச்சடி உணவு; தகவல் தொடர்புக்கு வாக்கி-டாக்கி - 41 பேரின் தற்போதைய நிலைமை என்ன?

வெளியான வீடியோ

இந்நிலையில், சூடான ரவா கிச்சடி, பால், குழைவான பருப்பு மற்றும் தகவல் தொடர்புக்காக வாக்கி-டாக்கியும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக குகைக்குள் சிக்கிய 41 பேர் உயிரோடு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த செய்தி அறிந்து தொழிலாளர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீட்புப் பணிகளை கண்காணிக்க, உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்பொழுது சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. இடிபாடுகள் வழியாக செலுத்தப்பட்ட 6 அங்குல குழாய் வழியாக கேமரா அனுப்பப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

எண்டோஸ்கோபி கேமரா மூலம் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை வீடியோ எடுத்துள்ளனர். மேலும், மீட்புக்குழுவினர் அந்த தொழிலாளர்களிடம் பேசும் வீடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.