சித்ரவதை செய்த கணவன்; பிரிந்து வந்த மகள் - மேள தாளத்துடன் அழைத்துச் சென்ற தந்தை!
மகளை வாத்தியங்கள் முழங்க தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.
பிரிந்து வந்த மகள்
ஜார்க்கண்ட், ராஞ்சியில் மின்சார வாரியத்தில் பொறியாளராகப் பணி செய்பவர் சச்சின் குமார். இவர் சாக்ஷி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
ஆனால், திருமணம் ஆனதில் இருந்து சாக்ஷியை அவரின் கணவர் வீட்டில் கடுமையாக சித்ரவதை செய்வதாக அவரது தந்தை பிரேம் குப்தாவுக்குத் தெரிய வந்தது.
கொண்டாடிய தந்தை
மேலும், சச்சினுக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்யப்பட்டதை மறைத்து திருமணம் செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து கொடுமைகளை தாங்க முடியாத சாக்ஷி சித்ரவதை குறித்தும், அவரை பிரியப்போவதாகவும் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
உடனே, மகளை கோலகலமாக திருமணம் செய்து அனுப்பி வைத்தாற்போல அழைத்து வர வேண்டும் என தந்தை முடிவு செய்துள்ளார். தொடர்ந்து, வீட்டில் இருந்து வாத்தியங்களுடன், சாக்ஷியின் கணவர் வீட்டுக்குச் சென்று ட்டாசு வெடித்து, கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்துள்ளார்.\
இதுகுறித்த வீடியோ வெளியாளி தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய பிரேம் குப்தா, ``மகள்களுக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்து கொடுக்கிறோம்.
கணவர் வீட்டில் தவறு நடப்பது தெரிந்தால் மகள்களை மரியாதையுடனும், கௌரவத்துடனும் திரும்ப அழைத்து வருவது அவசியம். ஏனென்றால் மகள்கள் விலைமதிப்பற்றவர்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.