இருட்டு அறையில் பெண்ணை கொடூரமாக தாக்கிய போலீஸ் - சர்ச்சையை கிளப்பிய வீடியோ!

Viral Video Uttar Pradesh
By Sumathi Dec 27, 2022 04:41 AM GMT
Report

இளம்பெண்ணை இருட்டு அறையில் போலீஸ் ஒருவர் கொடூரமாக தாக்கிய வீடியோ பரவி வருகிறது.

போலீஸ் அராஜகம்

கான்பூரில் கக்வான் என்ற பகுதி உள்ளது. இங்கு சப் இன்ஸ்பெக்டர், இளம்பெண் ஒருவரை காவல் நிலையத்தில் உள்ள அறைக்குள் அழைத்து சென்று உள்பக்கமாக கதவை பூட்டிவிடுகிறார். அந்த இருட்டு அறையில் பெண்ணை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார்.

இருட்டு அறையில் பெண்ணை கொடூரமாக தாக்கிய போலீஸ் - சர்ச்சையை கிளப்பிய வீடியோ! | Uttar Pradesh Police Brutally Attacks Woman Video

மேலும், அந்தப் பெண்ணை பின்பக்கமாக நின்று இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு சித்ரவதை செய்கிறார். அவர் கெஞ்சியும் போலீஸ் விடுவதாக இல்லை. தொடர்ந்து பெண்ணின் உறவினர்களும் அந்த பகுதி மக்களும், அறைக்கு வெளியே ஜன்னல் வழியாக கத்தி கதறி கெஞ்சியுள்ளனர்.

கண்டனம்

அந்தப் பெண்ணை தொடர்ந்து தாக்கும் அவர் உங்களை போன்ற ஆட்கள் போலீசாரிடம் சரியாக நடப்பதில்லை, நீங்கள் எப்போதுமே தவறுதான் செய்கிறீர்கள் என கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரவி வருகிறது.

இதற்கு எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் போலீஸாரின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.