மோசமான நிலவரம்; போலீஸாருடன் கடும் மோதல் - விவசாயி உயிரிழப்பு, போராட்டம் நிறுத்தம்!

Delhi Government Of India Death Haryana
By Sumathi Feb 22, 2024 05:03 AM GMT
Report

போரட்டம் தீவிரம் அடைந்த நிலையில் இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை,

farmers protest

கடன் தள்ளுபடி உள்ளிட்ட 13 கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தை அறிவித்தனர். இந்நிலையில், பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சக்தி வாய்ந்த டிராக்டர்கள், தடுப்புகள் என விவசாயிகள் போரட்டம் தீவிரம் அடைந்தது.

கண்ணீர் புகைக்குண்டு; தகர்த்தெறிந்த விவசாயிகள், சட்டம் கொண்டுவர முடியாது - உச்சக்கட்ட பரபரப்பு!

கண்ணீர் புகைக்குண்டு; தகர்த்தெறிந்த விவசாயிகள், சட்டம் கொண்டுவர முடியாது - உச்சக்கட்ட பரபரப்பு!

ஒருவர் உயிரிழப்பு

விவசாயிகள் ஹரியானாவுக்குள் நுழைய முடியாதவாறு கான்கிரீட் தடுப்புச்சுவர்கள், இரும்பு முள் வேலிகள் என தடுப்புகள் அமைக்கப்பட்டதை அடுத்து , போலீசார்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 12 போலீசாரும், 3 விவசாயிகளும் படுங்காயம் அடைந்தனர்.

haryana

காயமடைந்த விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். போராட்டத்தில் ஈடுப்பட்ட பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த 21-வயகான சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, 5-ம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்த நிலையில் தொடர்ந்து போரட்டம் இரண்டு நாளைக்கு நிறுத்தப்படுவதாக விவசாய சங்க தலைவர் தெரிவித்தார்.