இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி; வங்கிக் கணக்கில் ரூ.2000 - உங்களுக்கு வந்துருச்சா?
PM-kisan 15 வது தவணைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
PM-kisan
இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (PM kisan சம்மான் நிதி) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதன்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக அளிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் 8 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர்.
15-வது தவணை
இந்நிலையில் 15-வது தவணையினை நவம்பர் மாத கடைசி வாரத்தில் விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்த நிலையில் விழாக்காலத்தை கருத்தில் கொண்டு,

இன்று ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 2000 ரூபாய் பணத்தினை பிரதமர் மோடி வரவு வைத்தார். இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil