அதிமுக ஆலோசனை கூட்டத்தில் இருந்து திடீரென வெளியேறிய மைத்ரேயன்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் இருந்து முன்னாள் எம்.பி மைத்ரேயன் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலோசனை கூட்டம்
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக-வின் அவை தலைவரை தேர்வு செய்வது,பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள்,ஜனாதிபதி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வந்த முன்னாள் எம்.பி மைத்ரேயன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
கூட்டத்திற்கு வருவோர் தொலைபேசியை எடுத்துச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தியதால் அவர் மைத்ரேயன் வெளியேறினார்.
ஆதீனத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு தி.மு.க. அரசு மூக்கை நுழைக்கிறது - எடப்பாடி பழனிசாமி