குடிபோதை.. தாறுமாறான வேகம் - ஆண் நண்பருடன் விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் நடிகை?

Madhumitha Tamil TV Serials Tamil Actors Tamil Actress Ethirneechal
By Jiyath Feb 27, 2024 06:08 AM GMT
Report

நடிகை மதுமிதா விபத்தில் சிக்கிய விவகாரம் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.        

நடிகை மதுமிதா

பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை மதுமிதா. தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

குடிபோதை.. தாறுமாறான வேகம் - ஆண் நண்பருடன் விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் நடிகை? | Ethirneechal Serial Actress Madhumitha Accident

இந்த சீரியல் அவருக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மதுமிதா குடிபோதையில் கார் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாக செய்தி பரவி வருகிறது.

மதுமிதாவுக்கு அவருடைய ஆண் நண்பரும் காரில் வந்து கொண்டிருந்தபோது இருவருமே மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சோழிங்கநல்லூர் பக்கத்தில் உள்ள ஒரு வழிப் பாதையில் அதுவும் ராங் ரூட்டில் காரை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

செய்தி வாசிக்கும்போதே அவரின் மரணம்.. பூவை எடுத்து வச்சுட்டேன் - நிர்மலா பெரியசாமி வேதனை!

செய்தி வாசிக்கும்போதே அவரின் மரணம்.. பூவை எடுத்து வச்சுட்டேன் - நிர்மலா பெரியசாமி வேதனை!

கார் பறிமுதல்

அப்போது கார் அதிவேகமாக வந்து எதிரில் பைக்கில் வந்த காவலர் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குடிபோதை.. தாறுமாறான வேகம் - ஆண் நண்பருடன் விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் நடிகை? | Ethirneechal Serial Actress Madhumitha Accident

அப்போது மதுமிதாவும் அவரின் ஆண் நண்பரும், எங்கள் மீது தவறில்லை , காவலர் தான் வேகமாக வந்து காரில் மோதிவிட்டார் என்று வாக்குவாதம் செய்துள்ளனர். உடனடியாக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் காரை பறிமுதல் செய்துள்ளனர்.

மதுமிதாவின் கார் மோதியதில் காயமடைந்த காவலர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.