கருமுட்டை விவகாரம் - சிறுமி தற்கொலை முயற்சி..!

Tamil nadu Tamil Nadu Police
By Thahir Jun 29, 2022 07:32 AM GMT
Report

ஈரோட்டில் கருமுட்டை விற்பனை விவகாரத்தால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருமுட்டை விவகாரம் 

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் வலுக்கட்டாயமாக கருமுட்டை எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய்,வளர்ப்பு தந்தை மற்றும் பெண் புரோக்கர் மாலதி போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருமுட்டை விவகாரம் - சிறுமி தற்கொலை முயற்சி..! | Egg Case Attempted Suicide Of A Girl

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு ஆர்.என்.புதுாரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது வளர்ப்பு தந்தை மூலம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக மருத்துமனைகளில் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட சிறுமி மன உளைச்சலில் இருந்த வந்ததாக கூறப்படுகிறது. இதனால் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சிறுமி தற்கொலை முயற்சி 

இந்த நிலையில் காப்பகத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற சிறுமி கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த அமிலத்தை எடுத்து குடித்து மயக்கமடைந்துள்ளார்.

கருமுட்டை விவகாரம் - சிறுமி தற்கொலை முயற்சி..! | Egg Case Attempted Suicide Of A Girl

இது பற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த காப்பக நிர்வாகிகள் சிறுமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.