அமலாக்கத்துறை அதிகாரியே ஆட்டையப்போட்டால் எப்படி? - கட்டு காட்டாக சிக்கிய பணம்!

Rajasthan Enforcement Directorate
By Vinothini Nov 03, 2023 08:24 AM GMT
Report

அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதாக கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ED அதிகாரி

ராஜஸ்தான், ஜெய்ப்பூர் மாவட்டம், பஸ்ஸி என்ற பகுதியை சேர்ந்தவர் நவல் கிஷோர் மீனா. இவர் மணிப்பூர் தலைநகரான இம்பாலில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

ed-officer-arrested-in-jaipur-for-getting-bribe

அவர் பணியாற்றும்பொழுது இம்பால் அமலாக்கத் துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிட்ஃபண்ட் வழக்கு ஒன்றை தீர்த்து வைப்பதற்காக இந்த அதிகாரி நவல் கிஷோர் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்பதாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒருவர் ஏசிபி-இடம் புகார் அளித்தார்.

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இயக்குனர்.. காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள் - கொடுமை!

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இயக்குனர்.. காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள் - கொடுமை!

சிக்கிய அதிகாரி

இந்நிலையில், இந்த புகாரின் பேரில் ஏசிபி விசாரணை மேற்கொண்டார், அப்பொழுது ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கியதாக நவல் மற்றும் அவரது கூட்டாளி பாபுலால் மீனா ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

arrest

மேலும், அந்த பாபுலால் என்பவர் ஜெய்ப்பூர் மற்றும் ஆல்வார் மாவட்டங்களில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட கோட்புட்லி – பெஹ்ரோர் மாவட்டத்தில் உள்ள துணை பதிவாளர் அலுவலகம் ஒன்றில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருவதாக தெரியவந்துள்ளது.