விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இயக்குனர்.. காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள் - கொடுமை!
இயக்குனர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை போட்டோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து
தெற்கு டெல்லியின் பஞ்சசீல் என்கிளேவ் என்ற பகுதியில் 30 வயதான பியுஷ் பால் என்கிற ஆவணப்பட இயக்குனர், சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த பகுதியில் எதிர்பாராதவிதமாக அவரின் பைக்கும், குருகிராமைச் சேர்ந்த பன்டி என்பவர் ஓட்டிச் வந்த பைக்கும் மோதியுள்ளது.
இதில் பியூஷ் பால் படுகாயமடைந்தார், பின்னர், சாலையோரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. அங்கு இருந்த மக்கள் அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
உயிரிழப்பு
இந்நிலையில், அப்பகுதியில் பைக் டாக்சி ஓட்டும் ஒருவர், மற்ற சிலருடன் இணைந்து காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். இதில் போலீசாருக்கு அரை மணிநேரத்திற்கு பிறகு தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த பியுஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், பியுஷின் நண்பர் சன்னி போஸ், "பியுஷ் 20 நிமிடங்களுக்கும் மேலாக ரத்த வெள்ளத்தில் கிடநதுள்ளார். அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. விபத்தை போட்டோ எடுக்கவும், வீடியோ எடுக்கவும் மட்டுமே செய்துள்ளனர். இரவு 9.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்து அரை மணி நேரம் கழித்தே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மக்கள் சரியான நேரத்தில் அவருக்கு உதவியிருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். அவரிடம் இருந்து மொபைல் போன் மற்றும் கேமரா ஆகியவற்றை சிலர் எதுத்துச்சென்றுள்ளனர்" என்று கூறியுள்ளார்.