‘’என் அப்பாதான் என்னோட ஹீரோ ‘’ - ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மகளின் உருக்கம்

BipinRawat aashnaidder LS Lidder CDSGeneralBipinRawat
By Irumporai Dec 10, 2021 08:48 AM GMT
Report

நீலகிரி மாவட்டம், குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.

பயணித்த 14 பேரில் 13 பேர் இறந்துவிட்ட நிலையில், ஒருவர் மட்டும் பெங்களூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்தச் சம்பவத்துக்கு இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் இவர்களோடுஎல்.எஸ்.லிட்டர்’ என்றழைக்கப்படும் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர் எனபவரும் ஹெலிக்காப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

இவரது மறைவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகள் ஆஷ்னா:

என் தந்தையின் மறைவு நாட்டுக்கான இழப்பு, அவர் எனது ஹீரோ, அவர்தான் என்னோட சிறந்த நணபர். எனக்கு இப்போ 17 வயது ஆகப்போகிறது.

அப்பா இப்போது என்னோடு இல்லை. ஆனால் அவருடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவுகளையும் சுமந்து பயணிப்பேன்.

இனிவரும் காலங்களில் நல்லது நடக்கும் என நம்புவதாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த எல்.எஸ்.லிடரின் மகள் ஆஷ்னா கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.