நாய்க்கு வளைகாப்பு; வளையல் மாட்டும் பெண் - கவனம் ஈர்த்த வீடியோ வைரல்!
நாய்க்கு பெண் ஒருவர் வளைகாப்பு நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
நாய்க்கு வளைகாப்பு
சித்தார்த் சிவம் என்பவர் ரோஸி மற்றும் ரெமோ என்ற இரு நாய்களை வளர்த்துள்ளனர். இதில் ரோஸி கர்ப்பமான நிலையில் வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்த வீடியோவும் நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
அதில், வளைகாப்பிற்காக ரோஸியை தனியாக உட்கார வைத்து, சிவப்பு நிற தாவணியை சேலை போல அதன் உரிமையாளர் போர்த்துகிறார். பின், நெற்றியில் குங்குமம் இட்டு, கால்களில் வளையல்களை அணிவிக்கின்றார்.
வீடியோ வைரல்
தொடர்ந்து ரோஸிக்கு பிடித்த உணவு வளைகாப்பு சாதமாக கொடுக்கப்படுகிறது. மேலும், சிலேடு ஒன்றில் நான் ரெடி என்ற வாசகம் எழுதி ரோஸிக்கு முன்னதாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அருகில் நான் இருக்கிறேன் என ரெமோ சொல்வது போன்ற வாசகமும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாழ்த்துக்கள் என்பது போன்ற கருத்துக்களை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நாய்களுக்கு வளைகாப்பு நடத்தி வெளியான வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.