ஹனிமூன் முடிந்து வீட்டுக்கு கூட போகமால் நயன்தாரா எங்கே போனார் தெரியுமா?
திருமணம் முடிந்து தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஹனிமூன் முடிந்து இந்தியா திரும்பிய நிலையில் அவர்கள் வீட்டிற்கு போகாமல் நடிக்க சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதல்
காதல் இந்த நிலையில் விக்னேஷ் சிவனும்,நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம்
7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த 09.06.2022 மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
ஹனிமூன்
திருமணம் முடிந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்காக சென்று இருந்தனர்.
அங்கு உற்சாகமாக தங்கள் தேனிலவை கொண்டாடி வருகின்றனர்.தங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்த விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றி வந்தனர்.
இந்தியா திரும்பினர்
தாய்லாந்து நாட்டில் இருந்து ஹனிமூன் முடிந்து நேற்று முன்தினம் இந்தியா திரும்பிய நயன்தாரா,விக்னேஷ் சிவன் ஜோடி வீட்டிற்கு கூட போகமால் மும்பை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு அட்லீ இயக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், அதில் கலந்துகொள்வதற்காக நயன்தாரா அங்கு சென்றுள்ளார்.