திமுக நிர்வாகியை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற கும்பல் - நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

Tamil nadu DMK Crime
By Vidhya Senthil Sep 27, 2024 05:49 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

   திண்டுக்கல் அருகே திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக நிர்வாகி

தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் நிர்வாகிகளைக் குறிவைத்து பழிக்குப் பழி கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் அன்மையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை எற்பபடுத்தி உள்ளது.

DMK

அந்த வகையில் திண்டுக்கல் அருகே திமுக நிர்வாகி ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் மாசி . 40 வயதாகும் இவர் தி.மு.க வேடசந்தூர் தெற்கு ஒன்றிய பொருளாளராக உள்ளார்.

பிரச்சனை ஆகிடும்...ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்த வந்த சாய்தீனா!! போலீசாருடன் வாக்குவாதம்

பிரச்சனை ஆகிடும்...ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்த வந்த சாய்தீனா!! போலீசாருடன் வாக்குவாதம்

இந்த நிலையில் நேற்று இரவு மாசி பெருமாள் கவுண்டன் பட்டியில் உள்ள தனது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பியபோது சமத்துவபுரம் அருகே மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அறிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

வெட்டிக்கொலை

இதனையடுத்து மாசி இருசக்கர வாகனத்தைக் கீழே போட்டு விட்டுத் தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று தலை கழுத்து கை பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் மாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

MURDER

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈட்டுப்பட்டு வருகின்றனர் .

மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருவதால் அங்குப் பாதுகாப்பு பனியில் காவல் துறையினர் ஈட்டுப்பட்டு வருகின்றனர்