சர்வாதிகார ஆட்சி நடக்கிறது; ஒரு வாக்கு கூட பாஜகவுக்கு போடக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்!

India Punjab Arvind Kejriwal Lok Sabha Election 2024
By Jiyath May 27, 2024 06:57 PM GMT
Report

நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

அரவிந்த் கெஜ்ரிவால்

நாடு முழுவதும் 6 கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் 7-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வாதிகார ஆட்சி நடக்கிறது; ஒரு வாக்கு கூட பாஜகவுக்கு போடக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்! | Dictatorship Going On Country Says Arvind Kejriwal

அந்தவகையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் "இது மத்திய அரசுக்கான தேர்தல்.

உங்களுக்கு தைரியம் இருந்தால் இதை செய்யுங்கள் - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!

உங்களுக்கு தைரியம் இருந்தால் இதை செய்யுங்கள் - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!

கைகள் வலுவடையும்

மத்தியில் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம். மத்தியில் ஆட்சி அமைந்தால் நமது கைகள் வலுவடையும். எனவே 13 மக்களவை தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சிக்கு கொடுங்கள். அப்போது தான் உங்கள் உரிமைகளை மையத்தில் இருந்து கொண்டு வரலாம்.

சர்வாதிகார ஆட்சி நடக்கிறது; ஒரு வாக்கு கூட பாஜகவுக்கு போடக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்! | Dictatorship Going On Country Says Arvind Kejriwal

நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வாக்கு கூட பாஜகவுக்கு ஆதரவாக போடக்கூடாது. அனைத்து வாக்குகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக போட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.