உங்களுக்கு தைரியம் இருந்தால் இதை செய்யுங்கள் - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!

Tamil nadu ADMK BJP K. Annamalai
By Jiyath May 28, 2024 09:39 AM GMT
Report

அண்ணாமலை கூறி வரும் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் செய்தி சேனல் ஒன்றில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓர் இந்துத்துவா தலைவர் என்றும், அவர் தான் இந்து என்பதை வெளிப்படியாக மக்களிடத்தில் வெளிப்படுத்தினார் என்றும் கூறினார்.

உங்களுக்கு தைரியம் இருந்தால் இதை செய்யுங்கள் - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்! | Admk Rb Udhayakumar Reply To Bjp Annamalai

அண்ணாமலையின் இந்த கருத்துக்கள் அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தடித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் "எங்கள் தலைவர்கள் கடைபிடித்த கோட்பாடுகளை அவர்கள் சொல்லித்தான் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை இங்கு இல்லை.

மோடி பரமாத்மா கதையை கொண்டு வந்ததே இதுக்கு தான் - கலாய்த்த ராகுல் காந்தி!

மோடி பரமாத்மா கதையை கொண்டு வந்ததே இதுக்கு தான் - கலாய்த்த ராகுல் காந்தி!

வஞ்ச புகழ்ச்சி 

அவர்களை (அண்ணாமலை) அடையாளப்படுத்தி கொள்ள, எங்கள் தலைவர்களை துணைக்கு அழைத்து கொள்கிறார்கள். இந்துத்துவா என்பது தனி விவாதம். அது வேறு. அது பற்றி எங்கள் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உரிய நேரத்தில் பதில் அளிப்பார்.

உங்களுக்கு தைரியம் இருந்தால் இதை செய்யுங்கள் - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்! | Admk Rb Udhayakumar Reply To Bjp Annamalai

உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் தலைவர்களை பற்றி மக்களிடத்தில் கூறுங்கள், முன்னாள் தலைவர்கள், இந்நாள் தலைவர்களின் பெருமைகளை மக்களிடத்தில் கூறுங்கள். அதன் மூலம் தமிழக மக்களின் நம்பிக்கை பெற முயற்சி செய்யுங்கள்.

ஆனால் உங்கள் கொள்கைகளை தமிழ்நாட்டு மக்கள் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்து தான் நீங்கள் எங்கள் தலைவர்கள் பற்றி பாராட்டுவது போல கூறி வஞ்ச புகழ்ச்சி அணியாக நீங்கள் கூறி வரும் கருத்துக்களை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.