நடிகர் அஜித் பாணியில் தல தோனி - ரசிகர்கள் வாழ்த்து!
நடிகர் அஜித் குமார் பாணியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்துள்ள காரியம் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தொழில்களில் முதலீடு
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தல தோனி, ஆடை நிறுவனம், மதுபானம், விவசாயம் என பல தொழில்களில் களமிறங்கி முதலீடு செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்களிலும் முதலீடு செய்ய தோனி ஒப்பந்தம் போட்டுள்ளார். அதன்படி, சென்னையை சேர்ந்த ‘கருடா ஏரோ ஸ்பேஸ்’ என்ற பிரபல ட்ரோன் தயாரிப்பு நிறுவனத்தில் பெரும் பணத்தை தோனி முதலீடு செய்துள்ளார்.
இந்தியாவில் குறைந்த விலையில் ட்ரோன்களை தயார் செய்யும் நிறுவங்களில் ஒன்றான அந்த நிறுவனம் விவசாயத்திற்கு உதவும் நவீன ட்ரோன்களை உற்பத்தி செய்யவுள்ளது.
சமீபத்தில் விவசாய துறைக்கு பயன்படும் வகையில் சில முக்கியமான திட்டத்தை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக கிராம அளவிலான தொழில்முனைவோர் அல்லது பூச்சிக்கொல்லி மற்றும் உர விற்பனையாளர்களுக்கு ட்ரோன்களை விற்பனை செய்வதற்கான ஒரு மாதிரி திட்ட வடிவத்தை உருவாக்கியதாக ஏப்ரல் மாதம் தெரிவித்தது.
விவசாயமும் - தோனியும்
எம்.எஸ்.தோனி-யும் விவசாயம் செய்து வரும் நிலையில், அவருக்கு ராஞ்சியில் ஒரு பண்ணை வீடு உள்ளது, அங்கு இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவித்து வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது விவசாயத்திற்காக பயன்படுத்தபடவுள்ள ட்ரோன் துறியிலும் முதலீடு செய்யவுள்ளார், மேலும், இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் எம்.எஸ்.தோனி செயல்பட போவதாக கூறப்படுகிறது.
முன்னதாக, ‘கருடா ஏரோ ஸ்பேஸ்’ நிறுவனம் குறித்து எலான் மஸ்க் கடந்தாண்டு ட்விட்டரில் குறிப்பிட்டு கவுரப்படுத்தியிருந்தார்.
அதே போல் சமீபத்தில் நடைபெற்ற பாரத் ட்ரோன் மகா உத்சவ் நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் தலைவர்கள், பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து