கள்ளக்காதலுக்கு இடையூறு - துடிக்க துடிக்க கணவரைத் தீர்த்துக்கட்டிய கொடூரம்!

Crime Dharmapuri Murder
By Vidhya Senthil Oct 25, 2024 09:42 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  கள்ளக்காதலுக்காக மனைவியே கணவரைத் தீர்த்துக்கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி 

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் -தமிழ் இலக்கியா தம்பதியினர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ராஜாராம் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கணவர் ராஜாராம் வேலைக்காக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம்.

dharmapuri murder

இதனால் அரூரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் தமிழ் இலக்கியா பியூட்டிபார்லர் வைப்பதற்காக பயிற்சிக்குச் சென்றுள்ளார்.அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நட்பாக மாறி நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

புதுப்பெண் தற்கொலை; ஆடியோவால் பகீர் - மாமியார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

புதுப்பெண் தற்கொலை; ஆடியோவால் பகீர் - மாமியார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

இதனையடுத்து ராஜராமுக்கும் கள்ளக்காதலன் சரவணகுமாருக்கும் அறிமுகமாகி நண்பர் என்ற முறையில் பழகி வந்துள்ளார். இதனால் தமிழ் இலக்கியாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இதுபற்றி தமிழ் இலக்கிய, தனது கள்ளக்காதலன் சரவணகுமாரிடம் கூறியுள்ளார்.

 கொலை     

இதனைத் தொடர்ந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் ராஜாராமை கொலை திட்டமிட்டுள்ளனர். இதற்காகக் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் ராஜாராமை சரவணகுமார், மது அருந்த அழைத்துச் சென்று மது அருந்தியுள்ளனர். அதிக போதையில் இருந்த ராஜராவை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

death

அப்போது கல்லட்டி பஸ் நிறுத்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் சரவணகுமார் திடீரென கல்லை எடுத்து ராஜாராமின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சரவணகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.